Posts

Showing posts from October, 2019

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.  ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக் கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத் தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால்... கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும்... அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே. வெறுமனே கையால் கொடுத்தால்.. கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்ற கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும்  தட்டில் வைத்துக் கொடுப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். இதே முறை தான் ஒருவரை அழைப்பதிலும் இன்று வரை கடை பிடிக்கப்படுகிறது.

குலம் காக்கும் குலதெய்வம்...!

குலம் காக்கும் குலதெய்வம்... என்றும் முதலிடம் குலதெய்வத்திற்கே... ஏன்? நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும், கருத்துமாக பேணிக்காக்கும் வல்லமை படைத்தவை. எனவேதான் அந்த தெய்வங்களை 'குலதெய்வங்கள்" என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வத்தின் சிறப்புகள் : குலதெய்வங்கள் பொதுவாக காடு, மலை மற்றும் வயல் போன்ற இடங்களில்தான் அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே இவ்வகை தெய்வங்களின் வழிபாட்டு இடம் இருக்கும். மேலும் குலதெய்வ கோவில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோவில் அமைப்பாகத்தான் இருக்கும். இவ்வகை கோவில்கள் முறைப்படி அமைக்கப்பட்டிருக்காது. அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும். இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். பெரும்பாலும் வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குலதெய்வ கோவில்களில் இடம் பெற...

திருவண்ணாமலை கிரிவலம்...!

திருவண்ணாமலையை கிரிவலம் வருவதன் புண்ணியமும்... &  கிரிவலம் வரும் முறையும்.. 1. பிறவா நிலையை அடையலாம். 2. ஆயிரம் வேள்விகள் செய்த பலன் கிடைக்கும். 3. காசி போன்ற உயர்ந்த தலங்களில் வாழ்ந்து பலகாலும் வழிபாடு செய்த புண்ணியத்தை ஒருமுறை வலம் வருவதால் பெறலாம். 4. எல்லாவகையான தீவினைகளும் அழிந்துவிடும். 5. நீண்ட காலம் அருந்தவம் செய்த புண்ணியம் பெறலாம். 6.பெரும் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், மன நலம், நல்ல உறவினர்கள் ஆகிய நலன்களை பெறலாம்.  7. கோள்களும், எமனும் விலகிச்செல்வார்கள்.  மலையை வலம் வரும் முறை மேலே கூறியுள்ள நலன்களை பெறுவதற்கு யார்தான் விரும்ப மாட்டார்கள், பயன் பெற வேண்டுமானால் மலையை வலம் வரும் முறையை அறிந்து  கொள்ள வேண்டும். 1.நீரால் உடல் தூய்மை செய்து கொள்ள வேண்டும் (குளித்தல்).  2.தூய்மையான எளிய ஆடையை உடுத்திக் கொள்ள வேண்டும்.  3 .திருநீறும் உருத்திராக்கமும் அணிதல் வேண்டும்.  4 .ஆண்கள் மேலாடையின்றி இடுப்பில் துண்டு உடுத்தி வலம்வருதல் புண்ணியம் தரும்.  5. குடை ,மிதியடி அணிதல் கூடாது. 6. வாகனங்களில் வலம் வருதல் ...

பவுர்ணமி விரத வழிபாட்டின் பலன்...

*சித்திரை மாத பவுர்ணமி* எமதர்மனின் கணக்கர் சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும். *வைகாசி மாத பவுர்ணமி*  முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும். *ஆனி மாத பவுர்ணமி *  காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும். *ஆடி மாத பவுர்ணமி*  கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும். *ஆவணி மாத பவுர்ணமி*  அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும். *புரட்டாசி மாத பவுர்ணமி*  இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர் களின் ஆசியைப் பெறலாம். *ஐப்பசி மாத பவுர்ணமி*  அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும். *கார்த்திகை மாத பவுர்ணமி*  கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். *மார்கழி மாத பவுர்ணமி*  ஆருத்ரா திருநாள். அன்றைய தினம்...

பக்தனுக்காக சபதம் மீறிய கண்ணன்.....!

மகாபாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணன் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார். "ஸ்வாமி, தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நானும் காரணமாகிவிட்டேன். பாவம் போக்க என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.... இதற்கு பீஷ்மரே சரியானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்று, வந்த விவரத்தைச் சொன்னான் கண்ணன். பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்... "ஏன் புது தெய்வத்தைத் தேடி வந்திருக்கிறாய்...? உன் அருகில் நிற்கிறானே கண்ணன்.... அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள்... பத்தாவது நாள் யுத்தம். நான் கெüரவ சேனைக்குத் தலைமை தாங்கிப் புறப்படுகிறேன். அப்போது துரியோதனன் வந்தான். "ஓய் பாட்டனாரே! உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன், மகா பலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே... உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே.. நீர் கபடம் செய்கிறீர். எனக்குத் துரோகம் செய்கிறீர். இந்தப் பத்து நாள் யுத்தத்தில் நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாப...

வெண்கடுகு...!

''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும். வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும். மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார். எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படு...

சாஸ்திர கதம்பம்..!

1.செவ்வாய் கிழமை எவரிடமும் கடன் வாங்குவதும், பத்திரத்தில் கையாழுத்திடவும் கூடாது. -காலப் பிரகாசிகா 2.முதல் திருமணம் செய்வதற்கு கார்த்திகை மாதம் கூடாது. மறுமணம் செய்வதற்கு காத்த்திகை மாதம் சிறந்தது. -விதான மாலை 3.சந்திரன் ரோகினியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில், அந்த நட்சத்திர நாழிகையில் பாதியை நீக்கி, மீதியிருப்பதில் முதல் பாதியில் எந்த காரியம் செய்தாலும், தடை,தாமதம் இல்லாமல் வெற்றி கிடைக்கும்.  -மணிக்கண்ட கேரளம் 4.கனவில் சுடுகாட்டைக் கண்டால் விரைவில் திருமணம் உண்டாகும். - கனவு பலன்கள் 5.வீட்டின் இடது புறத்தில் இருக்கும் மரங்களை விட, வலதுபுறத்தில் இருக்கும் மரங்கள் உயர்வாக இருக்க வேண்டும். -  வாஸ்து சாஸ்திரம். 6.பெண்கள் ஓம் என்பதை கூறக் கூடாது,ஹ்ரீம் என்று கூற வேண்டும். - -பூஜா கல்ப பஞ்சகம் 7.இரவில் பால் சாதம் ஆயுள் விருத்தி, இரவில் தயிர் சாதம் ஆயுள் குறையும்.  -சிவமகா புராண சாஸ்திரம் 8.அரளி பூக்களில் மஞ்சள் நிறம் அல்லது பொன் நிறப்பூக்கள் கொண்டு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்ய முதிர் கன்னி திருமணமும், கடன்களும் தீரும் -மஹாபாரதம்

ஆஞ்சநேயரின் சிறப்புகள்...!

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொரு வரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவானையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. பகைவரை அச்சமுறச் செய்யும் வலிமையும், மேரும...

பெருமாள் கோவிலில் சடாரியை தலையில் வைப்பது ஏன்?

பெருமாள் கோவிலில் தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, சடாரியை நம் தலையில் வைக்கும் போது சாபங்களும், தோஷங்களும் விலகுகிறது. காரணம், சடாரியின் மேல் ஸ்ரீமந் நாராயணனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும் என்கிறது சாஸ்திரம். ஒருசமயம், வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் வழக்கமாக தன் பாதுகையை விடும் இடத்தில் விடாமல் தன்னுடைய அறையில் கழற்றி வைத்தார். இதை கண்ட சங்கு, சக்கரம் மற்றும் கிரீடத்திற்கும் கோபம் ஏற்பட்டது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினால் சுவாமி கோபித்துக்கொள்வார் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தனர். அச்சமயம், ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்க முனிவர்கள் வந்திருப்பதாக தகவல் வந்ததால் முனிவர்களை காக்க வைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆ...

காணக்கிடைக்காத முருகர் வழிபட்ட இந்த பஞ்சலிங்க தரிசனம்...!

திருச்செந்தூரில் மூலவருக்குப் பின்னால் அமைந்துள்ள பாம்பறை என்னும் சுரங்க அறையில், சூரசம்ஹாரத்திற்குப் பின் முருகனால் பூஜிக்கப் பெற்ற பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த பஞ்சலிங்கங்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். திருச்செந்தூர் செந்திலாண்டவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும் இடத்தில் கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் உள்ளே குனிந்து செல்ல வேண்டும். இந்த குகைப்பாதை மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும். உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம். கூட்டமாக இருக்கும் நாட்களில் இந்த பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பதில்லை. காணக்கிடைக்காத முருகர் வழிபட்ட இந்த பஞ்சலிங்க தரிசனத்தை கண்டு பிறவி பலனை அடைவதற்காக அபூர்வமான காணொளிக்காட்சி                                     ...

மாயக்கண்ணன் மனசுக்குள் யார்?

Image
அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக  வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை. அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்...அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக...

ஆன்மீக கேள்வி பதில்...(3)

பாவச் செயல்களைத் தவிர்ப்பது எப்படி? நாம் எங்கே இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் கடவுள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நம் உள்ளத்தில் தோன்றும் சிந்தனைகளையெல்லாம் அவர் அறிவார், எங்கும் நிறைந்த அவர் நமக்கு மிகவும் அருகிலேயே இருக்கிறார் - இதை நாம் சரியாகப் புரிந்துகொண்டு மறவாமல் எப்போதும் நினைவில் வைத்திருந்தால், பாவம் செய்பவர்களாக நாம் இருக்க மாட்டோம். இறைவன் அருளைத் துணைாயக் கொண்டு வாழ்ந்தால் தான், மனிதன் தீயவற்றிலிருந்து விலகி வாழ முடியும். ஆழமான தெய்வசிந்தனைகள், உள்ளத்தில் தோன்றும தீய சிந்தனைகளை அகற்றும, எனவே நாம் நம் உள்ளத்தை் தூய சிந்தனைகளால் தெய்வ சிந்தனைகளால், புனிதமான சிந்தனைகளால் நிரப்பியபடியே இருக்க வேண்டும். மரணத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவனே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான். மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் கொண்டவன் தவறு செய்ய மாட்டான். மனிதன் கடந்த காலத்தை நினைத்து வருந்தக் கூடாது. எதிர்காலத்தை நினைத்து ஏங்கவும் கூடாது. மாறாக, நிகழ்காலத்தில் ஆன்மிகமும் அறமும் பொருந்திய வாழ்க்கை நடத்துவதிலேயே கருத்துச் செலுத்த வேண்டும். தெரிந...

ஹனுமனுக்கு பூலோகம் தான் வைகுண்டம்.

ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ஶ்ரீ ராமருடன் வந்த லக்ஷ்மணன் தன் இருப்பிடம் சேர்ந்துவிட்டான். சீதா தேவியாக பிறவி எடுத்த லக்ஷ்மி தேவியோ , ஶ்ரீ ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள். ஆனால் ஸ்ரீ ராமரால்  காலதேவன் கேட்டுக் கொண்டதன் படி அவ்வளவு சுலபமாக பூவுலகை விட்டு செல்ல முடியவில்லை. ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின் வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ஸ்ரீராமருடன் புறப்பட தயாரானார்கள். ஆனாலும் ஸ்ரீ ராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. என்ன காரணம்??? சாக்ஷாத் அந்த ஹனுமன் தான் முக்கிய காரணம். ஹனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகாமையிலேயே இருந்து அவர் பணிகளை செய்கிறான்; அவரை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டான். பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக ஹனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார். ஒரு நாள் ராமருடன் ஹனுமன் பேசிக்கொண்டிருந்தார். ஹனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ஶ்ரீ ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது. உடனே ஶ்...

ஆன்மீக கேள்வி பதில்...(2)

பூஜையின்போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம். உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். இது இரண்டாவது காரணம். முக்கியமாகக் கோயில்களில், பல விதமான தீபங்களை சுவாமிக்கு ஆராதனையின்போது காட்டுகிறார்கள். அதன் கருத்து என்ன? தீபாராதனையில் வரிசையாக அலங்கார தீபம், ஐந்து தீபம், மூன்று தீபம், ஒரு தீபம், முடிவில் கர்ப்பூர தீபம் என்று தீபங்களைக் காட்டும் வழக்கம் இருந்துவருகிறது. பலவாகக் காணும் உலகம், ஐம்பூதங்களில் ஒடுங்கி, அது முக்குணங்களில் ஒதுங்கி, அதுவும் ஒன்றுபட்டு, முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து, கர்ப்பூரம் போல் நிர்க்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பது கருத்து. திருவிளக்கிலுள்ள சுடரை நாம் குளிரச் செய்யலாமா அல்லது தானாக குளிரவேண்டுமா? திருவிளக்குச் சுடரைப் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் ...

சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள் !!!

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். 2. சனிக்கிழமை தோறும் பகவா னுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும். 3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். 4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். 5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. 6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். 7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும். 8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம். 9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம். 10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம். 11. கோமாதா பூஜை செய்யலாம். 12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். 13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்த து. 14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். 15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். 16. உட...

ஆன்மீக கேள்வி பதில்...(1)

ஜபமும் தியானமும் செய்வதால் வரப்போகும் துன்பத்தை நீக்கிக்கொள்ள முடியுமா? தீவினைகள் மூன்று வகைப்படும். அவையாவன: வந்தவை, வந்திருப்பவை, வரவிருப்பவை. இவற்றைத் தொலைக்கக்கூடியது நாமஜபம். நோய் வந்தால் சில மருந்துகளை உட்கொண்டு நோயை நீக்கிக்கொள்கிறோம். மேலும் வரவிருக்கும் நோயையும் சில மருந்துகளைச் சாப்பிடுவதனால் முன்பே தவிர்த்துக்கொண்டுவிடவும் இயலும் அல்லவா? அதுபோல், வரவிருக்கும் தீவினைகளையும் இறைவனிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வதால், போதிய அளவு மேற்கொள்ளப்படும் ஜபம், தியானம் போன்ற தவ சாதனைகளினால் விலக்கிக்கொண்டுவிடலாம். அல்லது வெகுவாகக் குறைத்துக் கொண்டுவிடலாம். சில பரிகாரங்கள், தான தர்மங்கள் போன்றவற்றாலும் துன்பங்களை நீக்கிக்கொள்ள முடியும். பொதுவாக மாசில்லாத பக்தி கொண்டவர்கள், துன்பங்கள் நீங்கவேண்டும் என்றுகூட இறைவனிடம் வேண்டுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் துன்பம் சூழ்ந்தபோதும் அதைத் தாங்கும் சக்தியையும் இறைவன் அருளால் பெறுகிறார்கள். கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபிறகு, அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து வரவேண்டும் என்ற நியதி இருக்கிறதா? கோயிலுக்கு...

கீதையும் 18 அத்தியாயங்களும்...!

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது. 1 காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது என்பதை கீதையின் முதல் அத்யாயம் நமக்கு விளக்குகிறது. 2 குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை கீதையின் இரண்டாவது அத்யாயம் நமக்கு விளக்குகிறது. 3 லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை கீதையின் மூன்றாவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது. 4 மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை கீதையின் நான்காவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது. 5 மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம் அதுவே அவன...

35 காயத்ரி மந்திரங்கள்...!

காயத்ரி மந்திரங்கள்...! ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத். காயத்ரி மந்திரத் திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவா மித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். 1. வினாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி : ப்ரசோதயாத். 2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேநாய தீமஹி தந்நோ சண்முக: ப்ரசோதயாத் 3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் 4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே விஷ்ணு பத்ந்யைச தீமஹி தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத் 5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் 6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யா குமரீச தீமஹி தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத் 7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி ஓம் தாமோதராய வித்மஹே ருக்மணி வல்லபாய தீமஹி தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத் 8. ஸ்ரீ ராமர் காயத்ரி ஓம் தசரதாய வித்மஹே சீதா வல்லபாய தீமஹி தந்நோ ராம: ப்ரசோதயாத்...

கர்மா...

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? 2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்? 3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது? 4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு . ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினைஎனப்படுவது.  அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை. ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தைபார்த்துவிடுவோம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம். இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதைவினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான எதிர்வினை செயல்படும். எப்படியென்றால் நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் ...

யம தீபம் ...!

யம தீபம் ------------------- தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும். யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை: 1. உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்ட...

27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்...!

பொதுவாகவே ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, இதுபோன்ற மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது. உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே ...

ஸ்ரீ சரஸ்வதி அஸ்டோத்திரம்

ஸ்ரீ சரஸ்வதி அஸ்டோத்திரம் மந்திரங்கள்  ஓம் ஸரஸ்வத்யை நமஹ ஓம் மஹாபத்ராயை நமஹ ஓம் மஹாமாயாயை நமஹ ஓம் வரப்ரதாயை நமஹ ஓம் ஸ்ரீப்ரதாயை நமஹ ஓம் பத்மநிலயாயை நமஹ ஓம் பத்மாக்ஷ்யை நமஹ ஓம் பத்ம வக்த்ராயை நமஹ ஓம் சிவானுஜாயை நமஹ ஓம் புஸ்தகப்ருதே நமஹ ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ ஓம் ரமாயை நமஹ ஓம் பராயை நமஹ ஓம் காமரூபாயை நமஹ ஓம் மஹாவித்யாயை நமஹ ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ ஓம் மஹாச்ரயாயை நமஹ ஓம் மாலிந்யை நமஹ ஓம் மஹாபோகாயை நமஹ ஓம் மஹாபுஜாயை நமஹ ஓம் மஹாபாகாயை நமஹ ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ ஓம் திவ்யாங்காயை நமஹ ஒம் ஸூரவந்திதாயை நமஹ ஓம் மஹாகாள்யை நமஹ ஓம் மஹாபாஷாயை நமஹ ஓம் மஹாகாராயை நமஹ ஓம் மஹாங்குஸாயை நமஹ ஓம் பீதாயை நமஹ ஓம் விமலாயை நமஹ ஓம் விஸ்வாயை நமஹ ஓம் வித்யுந்மாலாயை நமஹ ஓம் வைஷ்ணவ்யை நமஹ ஓம் சந்த்ரிகாயை நமஹ ஓம் சந்த்ரவதநாய நமஹ ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ ஓம் ஸாவித்ர்யை நமஹ ஓம் ஸூரஸாயை நமஹ ஓம் தேவ்யை நமஹ ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ ஓம் வாக்தேவ்யை நமஹ ஓம் வஸூதாயை நமஹ ஓம் தீவ்ராயை நமஹ ஓம் மஹாபத்ராயை நமஹ ஓம் மஹாபலாயை நமஹ ...

கிருஷ்ணரின் வம்சம் அழிந்த காரணம்...!

நாம் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. பின், நமக்கு ஏன் இந்த கஷ்டத்தை ஆண்டவன் கொடுக்கிறான் என்ற சந்தேகம், நம்மில் பலருக்கும் ஏற்படும். ஏனெனில், செய்த தவறை நியாயப்படுத்துவது, மனிதனின் பிறவி குணம். ஆனால், இறைவன் அப்படிபட்டவன் அல்ல. செய்த தவறுக்கு, தண்டனை வழங்குவதில் அவன் தான் சரியான நீதிபதி. இதற்கு, மஹாபாரத்திலேயே உதாரணம் இருக்கிறது. குருஷேத்திரம் யுத்தம் முடிந்துவிட்டது. ஹஸ்தினாபுரத்து அரசனாக, தருமன் முடிசூட்டிக் கொண்டு விட்டான். பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க முயன்றதால், மன நிம்மதியின்றி, துரோணரின் மகன், அஸ்வத்தாமன் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சந்தேகம் ஆட்டிப்படைத்தது. ‘என் தந்தை சத்தியவான்; செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே, துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார். ஆனால், அவரை, பாண்டவர்கள், நான் இறந்ததாக பொய் சொல்லி, அநியாயமாக கொன்று விட்டனர். என் தந்தை செய்த தவறு என்ன’ என, மனதுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்தான். கிருஷ்ணன் மீது அவனுக்கு கோபம் இருந்தது. அதனால், அவனிடமே, தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டான். ‘என் தந்தையை...

அஷ்டமியும் நவமியும்...

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல . நம் முன்னோர்கள் அஷ்டமி  அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ?  அதற்கு என்ன காரணம் ? அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது. கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!! பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம். நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்) நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள...

எண்ணம் போல் வாழ்க்கை...!

Image
வாசலில் ஒரு யாசகன் நின்றிருந்தான்.. அம்மா..தாயே...தர்மம் பண்ணுங்கம்மா.. அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்தாள்.. வெளியே வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த தன் மகளை அழைத்து அவள் கைகளில் அரிசியை அள்ளி கொடுத்து யாசகன் பாத்திரத்தில் இட சொன்னாள்... பெற்று கொண்ட....யாசகன் பக்கத்து வீட்டுக்கு யாசகம் கேட்க சென்றான்.. அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தன் மகளை கூப்பிட்டு அவள் கைகளில் அரிசியை கொடுத்து யாசகனுக்கு அளிக்க சொன்னாள்... காலங்கள் உருண்டோடியது.. இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது.. சிறுமிகள் வளர்ந்து பெரியவர்களாகினர்... அவர்கள் தாய் காட்டிய வழியில் தர்மமும் தொடர்ந்தது.. ஒரு நாள் அந்த முதிய பெண்மணிகள் இறந்து வானுலகம் சென்றனர். அங்கே அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது.. மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது... உடனே அவள் ...இறைவனிடம் முறையிட்டாள். இருவருமே ஒரே மாதிரி தானம் செய்தும் ஏனிந்த பாரபட்சம் என்று வாதிட்டாள்.. அதற்கு இறைவனோ... முதலாமவள் தனக்கு பிறகு தன் குழந்தையும் இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில...

தர்ம சாஸ்திரம்...!

Image
1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; 2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; 3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; 4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். 5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். 6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும். 7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும். 8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். 9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. 10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. 11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. 12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது. 13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது. 14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது. 15. கிழக்கு...