Posts

Showing posts from 2020

*ஸ்வர்ண கௌரி விரத மஹிமை*

Image
ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்களுக்கு சகல சுகமும் வளரும். இந்த விரதம் கடைபிடிப்பதற்கான கதையை விரிவாக கீழே பார்க்கலாம் இந்த விரத மஹிமை, ஸ்காந்த புராணத்தில், ஸூத பௌராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமைக்காகச் செய்யப்படுவதாகிய கௌரி விரதங்களின் முக்கியத்துவம் இதில் மறைபொருளாகப் புலப்படும்.. ஒரு முறை, கந்தப் பெருமான், சிவனாரிடம், இந்த விரதக் காரணம் பற்றி வினவ, அவரும் பின் வருமாறு அருளிச் செய்தார்.. முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர்.. அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.. ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு தடாக(குள)க் கரையில் அப்ஸரஸ்கள் ஒரு விரதத்தை அனுஷ்டிக்கக் கண்டான். அவர்களை அணுகி, 'இந்த விரதம் யாது?, அதன் பலன் என்ன?' என்று கேட்டான். அவர்களும், இது 'ஸ்வர்ண கௌரி விரதம், இதை ஆவணி மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயையன்று அனுஷ்டிக்க வேணடும். இந்த விரதத்தை கௌரி தேவியைக் கு...

கீதையும் 18 அத்தியாயங்களும்

Image
  கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச் சென்றால் தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பு தான் இது. 1 காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது என்பதை கீதையின் முதல் அத்யாயம் நமக்கு விளக்குகிறது. 2 குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும் என்பதை கீதையின் இரண்டாவது அத்யாயம் நமக்கு விளக்குகிறது. 3 லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை கீதையின் மூன்றாவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது. 4 மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும் அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை கீதையின் நான்காவது அதிகாரம் நமக்கு விளக்குகிறது. 5 மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம் அதுவே அவனை அழித்துவிடும் ...

பெண்மையை போற்றிய தமிழ் இலக்கியங்கள்

Image
  ஓர் அழகிய இளம் மங்கை.  அவளுக்கு முதிர்ந்த கணவன்.  மனமுவந்து வாழ்கிறாள்.  ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.  அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை.  பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.  ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.   தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள். *இது நளாயினி கதை*.  *இது வட மொழி இலக்கியம்*.. தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.  தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,  தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. -  *இது சிலப்பதிகாரம்*. அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். ...

கும்ப ஸ்தாபனம்

Image
  🔥சர்வம் சிவமயம்🔥 கும்பம் என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம். சர்வம் சிவமயம்          

சோடசக்கலை நேரம் என்றால் என்ன?

Image
எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ? எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்? இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர். ( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்) மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . , அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன . சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். *16 வதாக ஒரு கலை இரு...

"ஆரோக்யமாக வாழ அருமையான உபதேஸம்"

Image
"ஆரோக்யமாக வாழ அருமையான உபதேஸம்" பெரியவாளுக்கு வந்து நமஸ்காரம் செய்தாள் ஒரு பக்தை. "பெரியவா...... மனுஷாளுக்கு.... பணம், புகழ், ஆயுஸ் எல்லாமே வேணும்தான்! ஆனா, எல்லாம் இருந்தும், ஒடம்பு ஆரோக்யமா இல்லேன்னா ப்ரயோஜனமில்ல....  நன்னா ஆரோக்யமா இருக்கறதுக்கு பெரியவாதான் வழி சொல்லணும்..... ஸ்லோகமோ, வேற பாராயணமோ, கோவில் கோவிலா போகறதுக்கோ.... எனக்கு நேரமேயில்ல பெரியவா! simple-ஆ... என்னால ஆகக்கூடியதா பெரியவாதான் வழி காட்டணும்" எளிமையான பஞ்சிலிருந்து, எளிமையான ஆனால் ஹிதமான, நன்மையை மட்டுமே தரும் பருத்திதானே வரும்? அதே போல், எளியனான, ஸர்வ ஸுலபனான பகவானான பெரியவாளிடமிருந்தும்...... பக்தையை முன்னிட்டு, தறிகெட்டலைய மட்டுமே நேரம் இருக்கும் நமக்காக...... எளிய, மிக மிக ஸுலபமான உபதேஸம் சட்டென்று உதிர்ந்தது. "இதென்ன பெரிய விஷயம்? ஓம் நமோ பகவதே ஸூர்ய நாராயணாய நமஹ....ன்னு தெனோமும் 12 தடவை சொல்லிட்டு, கெழக்கப் [கிழக்கு]  பாத்து, 12 நமஸ்காரம் பண்ணு! போறும்......" திருக்கரம் உயர்ந்து அபயமும், ஆஶீர்வாதமும் தந்தது. "பெரியவா சொன்னதை.... நானும், குடும்பத்துல எல்லா...

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

Image
    5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்      நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர்.     இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.     பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.      5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.       மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.         ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!...     1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.      [பாகவத புராணம் 12.2.1]     2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.      மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல...

பக்குவம் - கவியரசர் கண்ணதாசன்

Image
*பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!* *🙏கவியரசு கண்ணதாசன்.🙏* *🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.* *🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, * ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும்* *வேதனை* *இருப்பது அவனுக்குப் புரிகிறது.* *🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து  வருகிறது.* *🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.* *🌼இளம் பருவத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.* *🌼வாழ்வில் அடி பட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.* *🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.* *🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறு பரிசீலனைக்கு வரும்.* *🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.* *🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.* *🌼நாற்பது வய...

மத்த இடத்தில் பிடிச்சு என்ன பிரயோசனம்?

Image
ஒவ்வொரு புகழ் வாய்ந்த பெரிய கோயிலின் அருகிலோ எதிரிலோ ஆஸ்திகர்களின் மனம் புண்படும் படியான வாசகங்களை கண்டிருப்பீர்கள். காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தின் எதிரிலுtம் உண்டு. ஒரு முறை மகா பெரியவர் காமாட்சியம்மன் கோயில் குளத்தில் ஸ்நானம் செய்ய சென்றார். அப்பாது அங்கே கடவுள் மறுப்பாளர்கள் எதிர்மறை வாசகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு நின்றார்கள். பெரியவருடன் வந்தவர்கள், அவ் வாசகங்களை கண்டால் பெரியவர் மனம் புண்படுமே என்று பதைபதைத்துப் போனார்கள். அவை பெரியவர்களின் கண்களில் பட்டுவிடாத வண்ணம் மறைத்து கொண்டார்கள். ஆனால் பெரியவர் கண்ணுக்கு தப்பாமல் ஒருவிஷயம் நடந்து விடமுடியுமா என்ன! ஸ்நான சங்கல்பம் துவங்கும் முன்பு ஒருவரை அழைத்து, 'கடவுள் மறுப்பாளர் கூட்டத்தில் பொறுப்பாளரைப் போய் பார்த்து, அவர்கள் வேறெங்காவது ப்ரச்சாரம் செய்யாமல் நாம் இருக்கும் இடத்தை தேடிவந்து எதற்காக செய்கிறார்கள் என்று கேட்டுக் கொ்டு வா' என்று அனுப்பினார். அவருக்கு விருப்பமில்லை என்றாலும் பெரியவா வார்த்தைக்காக போனார். கடவுள் மறுப்பாளர் என்ன சொன்னார் என்று தெரியுமா? "பெரியவர் மேல நிறைய மரியாதை உண்டுங்...

வீரபத்திரர் 100

Image
வீரபத்திரர் பற்றிய 100 குறிப்புகள் 1. வீரபத்திரர் என்றால் வீரத்தை பத்திரமாக தருபவர் என்று பொருள். 2. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட மக்களின் கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டு வீரபத்திரரின் வழிபாட்டு முறைகளும் பலவிதமாக உள்ளன. 3. ஆதித் தமிழர்கள், தங்கள் கிராமங்களில் அறம் நிலவ வேண்டும் என்ற ஒரே தத்துவத்தின் அடிப்படையில் வீபத்திரர் கோவில்களை ஊர் மத்தியில் கட்டினார்கள். 4. தமிழ்நாட்டில் சில கோவில்களில் மட்டுமே வீரபத்திரர் மூலவராக உள்ளார். பல கோவில்களில் திருச்சுற்றுத் தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் இருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வம் வீரபத் திரர்தான். 5. வீரபத்திரருக்கு எல்லாரும் பூஜை செய்துவிட முடியாது. அதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதிக்கு நிர்தேதோ தாரா யந்திர பூஜை என்று பெயர். 6. வீரபத்திரருக்கு நடத்தப்படும் பூஜைகளில் வாய்க்கட்டுப்பூஜை தனித்துவம் கொண்டது. மம்சாபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் ஸ்ரீ வீரபத்திரருக்கு வாய்க்காட்டுப் பூஜையே செய்யப்படுகிறது. 7. திருப்பெருந்துறை வீரபத்திரர் ஆலயத்திலும் சேலம் குகை நரசிங்க...

ஒரு கோயில் பலர் வாழ்க்கை

Image
ஒரு கோயிலால் எத்தனை பேர் வாழ்வு மலர்கிறது என்று தெரியுமா? * பூ உற்பத்தி செய்பவர் * மாலையாக கட்டுபவர் * அதனை விற்பனை செய்பவர் * அர்ச்சகர் * அர்ச்சனை சீட்டு கொடுப்பவர் * கோயில் காவலாளிகள், * தேங்காய் உற்பத்திசெய்பவர், * தேங்காய் விற்பனைசெய்பவர். *  ஊதுபத்தி உற்பத்தி செய்பவர் * அதனை விற்பனை செய்பவர்கள் (மொத்தமாகவும் சில்றையாகவும்,) * கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள், * அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள், * சந்தனம்,குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள் * பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள், * வாழைமரம் வளர்ப்பவர்கள் * அவற்றைவிற்பனைசெய்பவர்கள், * கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள், * இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், * வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள் * கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள் * அதன் ஓட்டுனர்கள் * கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள் * மடப்பள்ளிய...

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் !

Image
அக்ஷய திருதியை ஸ்பெஷல் ! அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. 1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள். 5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. 6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. 7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார். 8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். 9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார். 10. அட்சய திருதியை தினத்தன்...

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்

Image
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் 1. தினசரி பிரதோஷம் 2. பட்சப் பிரதோஷம் 3. மாசப் பிரதோஷம் 4. நட்சத்திரப் பிரதோஷம் 5. பூரண பிரதோஷம் 6. திவ்யப் பிரதோஷம் 7. தீபப் பிரதோஷம் 8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் 9. மகா பிரதோஷம் 10. உத்தம மகா பிரதோஷம் 11. ஏகாட்சர பிரதோஷம் 12. அர்த்தநாரி பிரதோஷம் 13. திரிகரண பிரதோஷம் 14. பிரம்மப் பிரதோஷம் 15. அட்சரப் பிரதோஷம் 16. கந்தப் பிரதோஷம் 17. சட்ஜ பிரபா பிரதோஷம் 18. அஷ்ட திக் பிரதோஷம் 19. நவக்கிரகப் பிரதோஷம் 20. துத்தப் பிரதோஷம் *1.தினசரி பிரதோஷம்* தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். *2. பட்சப் பிரதோஷம்* அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [ப...

இந்து ஆன்மீக பயிற்சி முகாம்

Image
மாணவ மாணவியருக்கு கோடைக்கால இந்து ஆன்மீக பயிற்சி முகாம்  (இல்லத்திலிருந்தபடியே) ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு சமயபோதனை பயிற்சி முகாம் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இவ்வாண்டு கொரோனா பதிப்பினால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அவரவர் வீட்டிலிருந்தபடியே இந்து சமய பக்தி பாடல்கள்,  தோத்திரங்கள், திருமுறை,  திவ்யப்ரபந்தம்,மற்றும் பக்திக்கதைகள் என பல அரிய விஷயங்களை தொகுத்து போதிக்க ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  உங்கள் வீட்டு குழந்தைகள் வீட்டில் வீணே தொலைக்காட்சி,  கைபேசி விஷயங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை அறிவதற்கு ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அற்புதமான இந்த திட்டத்தை ஏற்படுத்திஇருக்கிறார்கள். கல்லூரி வரை படிக்கும் மாணவ மாணவியர் கலந்துகொள்ள அழைக்கிறோம்.  ஆர்வமிருப்பவர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்பவர்கள் தங்கள் குழந்தைகள் பெயர், கல்வி, முகவரி,  கைபேசி எண் குறிப்பிட்டு கீழ்க்...

அருந்தமிழ் மருத்துவம் 500

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்.. இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.. சித்த மருத்துவர் பாக்கம் தமிழன தமிழ் மருத்துவ அறிவுரைப்பா: மூளைக்கு வல்லாரை   முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை    எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்   பசிக்குசீ  ரகமிஞ்சி கல்லீரலுக்கு  கரிசாலை   காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை   காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம்   தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்   நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு  முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்   மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு  மருதம்பட்டை   அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு  எள்ளெண்ணை   உணர்ச்சிக்கு  நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு    கொழுப்பெதிர்க்க வெண்ப...

4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த ஒரு பாடல்...!

*"4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல்  இருக்கிறதா..."* காஞ்சி பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார். ‘‘சுவாமி... தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா... அதை சொன்னால் நன்றாக இருக்குமே...’’ என்றார். கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார். 'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார். சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர். ''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் க...

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்..

இப்போது வந்து உள்ள (கொரோனா) போல  காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள்  இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், "தெய்வ குற்றம்' ஏற்ப்பட்டுவிட்டது என்று உடனே கோயில் திருவிழா ஏற்பாடு செய்து "காப்பு" கட்டி விடுவார்கள்.   கிராமத்தில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மனுக்கு சிலைகள் வைத்து வேப்ப மரத்தை எல்லை காக்கும் எல்லையம்மனாக கருதி வழிப்பட்டனர். அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள். இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள். வெளியூர் மக்கள் இந்த ஊருக்கு வர மாட்டார்கள், இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும். மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும், வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை  கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்.  இவை அனைத்தும் கிருமி நாசினிகள்,  கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கக்கூடியது. மேலும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலந்து பருத்தி ஆடைகளை அதில் முக்கி உலரவைத்து அணிவார்க...

சிவபெருமான் உபதேசித்த சரவித்தை!!!

#சரவித்தை சகோதர சகோதரிகளுக்கு பணிவான வேண்டுகோள், பதிவு நீளம் பெரிதாக இருக்கலாம், இருப்பினும் ஒருமுறைக்கு பலமுறை ஊன்றி படிக்கவும். காரணம் என்னவென்றால் ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் இந்த சரவித்தையை தெரிந்துவைத்து கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது. நாள், கோள், நட்சத்திரம் இவை முதலான சோதிட நுட்பங்கள் எதுவுமே அறியாதவர்கள் தங்கள் மன நினைவினாலே ஐயங்களை தீர்த்துக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா?? என்று உமாதேவி கேட்க!! அதற்கு சிவபெருமான் உபதேசித்த கலையே சரகலை அல்லது சரவித்தை. கலைகளிலேயே முதன்மையானதும் சிறப்பானதும் இந்த சரகலைதான் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு. காலை எழுந்தது முதல் இரவு உறங்கப்போகும் வரை உங்களுக்கும், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது என்பதை இந்த சரகலையை கொண்டு 100% சரியாக கணித்துவிடலாம். உங்களிடம் ஒருவர் நல்லதுக்காக வருகிறாரா?? அவர் பேசுவது உண்மையா?? இந்த நாள் உங்களுக்கு எப்படி?? போகும் காரியம் வெற்றி பெருமா?? என அனைத்தையும் துள்ளியமாக கணித்துவிடலாம். சரம் என்றால் சுவாசம் என்று பொருள். ...

பங்குனி உத்திர விழா:

பங்குனி உத்திர விழா: இந்தப்பதிகம் உலகில் உள்ள 8000வகையான நோய்களைப் பட்டியல் இட்டு, அனைத்துக்கும் சஞ்சீவினி மருந்து முருகனது திருநீறு என்று காட்டுகிறது. பகைவருக்குச் சண்டமாருதமெனும் புயலாகவரும் முருகன் நோய்களைத் தீர்ப்பான் என்று காட்டும் பதிகம். கண்டவிட பித்தமும் வெப்புத் தலைவலி இருமல் காமாலை சூலை, குஷ்டம், கண்ட மாலை, தொடைவாழை வாய்ப் புற்றினொடு கடினமாம் பெருவியாதி அண்டொணாதச் சுரஞ் சீதவாதச்சுரம் ஆறாத பிளவை குன்மம் அடங்காத இரு பஃது மேகமுடன்நால் உலகத்தி லெண்ணாயிரம் பேர் கொண்டதொரு நோய்களும் வேலென்றுரைத்திடக் கோவென ஓலமிட்டுக் குலவுதினகரன்முன் மஞ்சுபோல் நீங்கிடும் குருபரன் நீறணிந்து, சண்டமாருத கால உத்தண்ட கெம்பீர சரஹணனை நம்பினவர்மேல் தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே !                  ---'சத்ரு சங்கார வேற்பதிகம்'

இறுதி காலம்

வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம், முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க! இளமை சீக்கிரம் போய்விடும், முதுமை சீக்கிரம் போகாது, ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது. சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க. கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை வரக்கூடாது. யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது. கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க  நமக்கு வேண்டாம். இளமையில் சாப்பிட்ட அத்தனையும் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை. அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்கவேண்டும் இறுதிகாலத்தில். சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும், சிவபெருமான் திருவடிக்கு. சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார்.  இளமை காலம்...