திருநீலகண்டப்பதிகம்

பதிகச் சிறப்பு:-

 *"திருநீல கண்டம்"* என்பது சிவபெருமானாருடைய கண்டத்தை (கழுத்தை) குறிப்பதாகும்.
 *நீலகண்டம் என்பது *"சிவாயநம, நமசிவாய" என்பதைப் போல அதுவும் பெருமானுடைய திருநாமம் ஆகும்.*
 இந்த திருநீலகண்டம் என்னும் திருநாமத்தைச் சொல்லியே *"திருநீலகண்ட நாயனார்"* முக்தி பெற்றார், ஆகவே இந்த பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் திருநீலகண்டம் என்று சம்பந்த சுவாமிகள் ஆணையிட்டு சொல்லியுள்ளார்.

🔆இந்த பதிகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் எந்தவிதமான நோய் தொற்றும், எந்தவிதமான காய்ச்சல்களும் அண்டாது.
 மேலும் இப்பதிகத்தை நாம் சத்தமாக பாடுவதனால் அந்த ஒலி அலைகள் வீட்டில் உள்ள காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க வல்லது.

பண் : வியாழக்குறிஞ்சி

      திருச்சிற்றம்பலம்

(1)அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்..
 உய்வினை நாடாது இருப்பது உந்தமக்கு ஊனமன்றே...
 கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்...
 செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*

(2)காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்...
 ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்...
 பூவினைக்கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்...
 தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*

(3)முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்...
 விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்ட விரிசடையீர்...
 இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்..
 சிலைத்தெமைத் தீ வினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*

(4)விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்..
 புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே..
 கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்...
திண்ணிய தீ வினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*

(5)மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண் தோள் உடையீர்..
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ...
 சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்...
 செற்றெமைத் தீ வினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*

(6 -7)மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்...
 பிறப்பில் பெருமான் திருந்தடி கீழ் பிழையாத வண்ணம்...
 பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்... சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*

(8)கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே...
 உருகிமலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம்..
 செருவில் அரக்கன் சீரில் அடர்த்து அருள் செய்தவரே...
 திரு இலித் தீவினை தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*

(9)நாற்றமலர் மிசை நான் முகன் நாரணன் வாதுசெய்து...
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்..
 தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்..
 சிற்றமதாம் வினை தீண்டப்பெறா *திருநீலகண்டம்.*

(10)சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்...
 பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்...
 பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடிபோற்றுகின்றோம்...
 தீக்குழி தீவினை தீண்டப் பெறா *திருநீலகண்டம்.*

(11)பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்...
 இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்...
 திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்...
 நிறைந்த உலகினில் வானவர் கோ னொடும் கூடுவரே.

       திருச்சிற்றம்பலம்

       (பதிகம் முற்றிற்று)

Comments

Popular posts from this blog

மேல்மலையனூர் அங்காளம்மன்

கொரானா ஏன்? எப்படி? எதனால்?